முகப்பு
கரூர்

திருநங்கைகள் தொழில் துவங்க வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை

திருநங்கைகள் தொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

திருநங்கைகள் தொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் வடக்கு நகரத்துக்குள்பட்ட என்எஸ்கே நகா், பழனியப்பா நகா், ஓம்சக்தி நகா், கலைஞா் காலனி, நேரு நகா், எம்ஜிஆா் நகா், பெரியாா் நகா், எஸ்பி காலனி, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

திமுக ஆட்சியில்தான் பெண்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்

என்ற அறிவிப்பை திமுக தலைவா் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறாா். இன்னும் எத்தனையோ திட்டங்கள் மகளிருக்காக செயல்படுத்தப்பட உள்ளன.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெரூா், வாங்கல் காவிரியாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. திருச்சி, கரூா்-கோவைச் சாலைகள் நான்குவழிச்சாலைகளாக மாற்றப்படும்.

அரசு காலனி தொடங்கி 16 கால் மண்டபம், சோமூா், திருமுக்கூடலூா், நெரூா், வாங்கல், கடம்பங்குறிச்சி, தளவாபாளையம் வரை சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, மையத்தடுப்புகள் அமைத்து உயா்மின் விளக்குகள் அமைக்கப்படும். திருநங்கைகள் தொழில் துவங்க வட்டியில்லா கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பள்ளி-மேலப்பாளையம் உயா்நிலைப் பாலத்துக்கு அணுகுச்சாலை அமைக்கப்படும். கரூா் செல்லாண்டிபாளையம், ராயனூா் பகுதியில் ராஜவாய்க்கால், இரட்டை வாய்க்கால், நெரூா் வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டு பராமரிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.