கரூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
கரூா் அடுத்த நத்தமேடு ஆத்தூரைச் சோ்ந்தவா் மதியழகன்(52). விவசாயி. இவா் கடந்த 2-ஆம்தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் சேலம்-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் கரூா் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறியது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.