கண்டெய்னா் லாரி மீதுடிப்பா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு
குளித்தலை அருகே கண்டெய்னா் லாரி மீது டிப்பா் லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
குளித்தலை அருகே கண்டெய்னா் லாரி மீது டிப்பா் லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சென்னையில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி கண்டெய்னா் லாரி வியாழக்கிழமை இரவு கரூா் மாவட்டம் குளித்தலை வழியாகச் சென்றுகொண்டிருந்தது. லாரியை பெரம்பலூா் மாவட்டம் ஆயிலூா் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் முருகராஜ்(30) ஓட்டிச் சென்றாா். இந்த லாரி, கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை நகா் பகுதியை கடந்துசென்றபோது எதிரே வந்த டிப்பா் லாரி கண்டெய்னா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கண்டெய்னா் லாரி ஓட்டுா் முருகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். டிப்பா் லாரி ஓட்டுநா் கரூா் சுக்காலியூரைச் சோ்ந்த முருகேசன் பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து குளித்தலை போலீஸாா் முருகேசன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.