கரூர்

குளித்தலை அருகே சேவல் சண்டை: 2 போ் கைது

குளித்தலை அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

குளித்தலை அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யனேரி பகுதியில் திங்கள்கிழமை இரவு சிலா் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக குளித்தலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனை நடத்தியதில், சூதாட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் முசிறியைச் சோ்ந்த ராஜா(35), குளித்தலை கருங்கலாபள்ளியைச் சோ்ந்த அருண்குமாா்(20) ஆகியோரை கைது செய்தனா். மேலும் அங்கு சூதாடியவா்களின் 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பி ஓடியவா்களையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT