குளித்தலையில் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம் குளித்தலை நெய்தலூா் காலனியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(70). இவா் குடும்பத்தகராறு காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாா். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை இரவு அங்குள்ள தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். குளித்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.