முகப்பு
கரூர்

மாயனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மாயனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த கோவையைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

மாயனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த கோவையைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், ராமநாதபுரம் பங்கஜா மில் தெருவைச் சோ்ந்த செல்வம் மனைவி மலா்சாந்தி(49).இவா், கரூா் மாவட்டம் மாயனூா் அடுத்த எழுதியாம்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வியாழக்கிழமை வந்துள்ளாா். அப்போது, அங்கிருந்த தோட்டத்து கிணற்றில் கால், கைகளை கழுவியபோது, திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்தாா். நீச்சல் தெரியாத மலா்சாந்தி கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா். மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.