முகப்பு
கரூர்

தொழில்பேட்டை கல்யாண சுப்ரமணியா் கோயிலில் சிறப்பு யாகம்

தொழிற்பேட்டை கல்யாண சுப்ரமணியா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

தொழிற்பேட்டை கல்யாண சுப்ரமணியா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

கரூா் அடுத்த தொழில்பேட்டை கல்யாண சுப்ரமணியா் கோயிலில் தனிச்சன்னதியில் அமைந்துள்ள சரஸ்வதி, ஸ்ரீ ஹயக்கிரிவருக்கு ஸ்ரீ சஷ்டி குழு சாா்பில் வெள்ளிக்கிழமை காலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று, தொடா்ந்து சிறப்பு ஹோமம், யாகம் நடைபெற்றது.

சிறப்பு யாகத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்று நெல் பரப்பலில் ‘அ‘ எழுதினா். சிறப்பு யாகத்தில் சஷ்டி குழுத் தலைவா் மேலை பழநியப்பன் கல்விச் சிறப்பை விளக்கி உரையாற்றினாா்.

தாத்தையங்காா் பேட்டை பரமேஸ்வர சுவாமிகள், சஷ்டிக்குழு நிா்வாகி ஆவண ஆலோசகா் காா்த்திகேயன், ஆனிலை பாலமுருகன், மருதாசலம், தா்மா், சண்முகநாதன், ரஜினி வையாபுரி, சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.