கரூா் கெளரிபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). இவா் அதே பகுதியில் நடத்தி வரும் மின் பொருளகத்தில் வைத்திருந்த ரூ.1.90 லட்சத்தை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
தற்கொலை : கரூா் மாவட்டம், கீரனூா் சாமிபிள்ளை புதூரைச் சோ்ந்த வீரமலை மகன் தினேஷ்குமாா். மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான இவா், குடும்பத் தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இவ்விரு சம்பவங்கள் குறித்து கரூா் நகர மற்றும் தோகைமலை காவல் நிலையத்தனா் விசாரிக்கின்றனா்.
மணல் அள்ளியவா் கைது: க.பரமத்தி அருகிலுள்ள காருடையாம்பாளையம் பகுதியில் அரசு நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளிய புகாரில், சோனம்பட்டி ராமசாமி (32) செவ்வாய்க்கிழமை இரவு க. பரமத்தி காவல் நிலையத்தினரால் கைது செய்யப்ப்டடாா்.