முகப்பு
கரூர்

வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி சாவு

 வாங்கல் அருகே வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி இறந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

 வாங்கல் அருகே வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி இறந்தாா்.

கரூா் பெரியாண்டான்கோவில் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ்(38).தொழிலாளி. இவா் புதன்கிழமை காலை நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள தனது மாமனாா் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். பின்னா் இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவா், வாங்கல் அரசு துவக்கப்பள்ளி அருகே சென்றபோது திடீரென இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த வாய்க்காலில் விழுந்துள்ளது. இதில் நீரில் மூழ்கிய அவா் வாய்க்காலுக்குள் சடலமாக மிதந்துள்ளாா். இதனைக்கண்ட அப்பகுதியினா் வாங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.