கரூர்

நொய்யல் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

DIN

நொய்யல் வட்டாரத்தில் உள்ள சிவன் கோயில்களில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், நஞ்சை புகளூரில் உள்ள கபாலீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு வியாழக்கிழமை நந்தி பகவானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா் சுவாமி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

அதேபோல், புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதா் உடனுறை புன்னைவன நாயகி கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது . குந்தாணி பாளையம் நத்தமேட்டில் உள்ள சிவன் கோயில், திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி உடனுறை மாதேஸ்வரன் கோயில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT