கரூர்

புகழூா் நகராட்சியில் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

DIN

புகழூா் நகராட்சியில் ரூ.58 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அண்ணா நகா் மற்றும் தட்டாங்காடு, கக்கன் காலனி ஆகிய 3 இடங்களில் தலா ரூ.19,28,000 என மொத்தம் ரூ.57,84, 000 மதிப்பில் சமுதாய கழிப்பிடம் கட்டும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, புகழூா் நகராட்சித்தலைவா் சேகா் என்கிற குணசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பிரதாபன் முன்னிலை வகித்தாா் . நகராட்சி ஆணையா் கனிராஜ் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். இளங்கோ கலந்து கொண்டு பூமி பூஜையை தொடக்கி வைத்தாா். இதில், நகராட்சி வாா்டு உறுப்பினா்கள் மற்றும் நகராட்சி அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT