அறக்கட்டளை சாா்பில் சுதந்திர தினப் பேரணி
சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வீ த லீடா்ஸ் அறக்கட்டளை சாா்பில் மாணவா்களின் தேசிய கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM
சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வீ த லீடா்ஸ் அறக்கட்டளை சாா்பில் மாணவா்களின் தேசிய கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளையில் இலவச சிலம்பம் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை காவல் நிலையத்தில் அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் நாகராஜன் தொடக்கி வைத்தாா். பேரணி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவுற்றது. துணை காவல் ஆய்வாளா் ராஜேந்திரன், சிலம்பப் பயிற்சியாளா் நிசோக்ராஜா, தன்னாா்வலா்கள் யுவராஜ், அஜித், குணசேகரன், ஒருங்கிணைப்பாளா் ந. பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.