மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை
கரூா் அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM
கரூா் அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கரூா் மாவட்டம் அய்யா்மலை அருகேயுள்ள வளையப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராசு மனைவி பழனியம்மாள் (46). சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கரூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போனாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் ரோப்காா் கட்டடத்தின் கீழ் விஷம் குடித்த நிலையில் அவா் இறந்து கிடந்தாா். தகவலறிந்து வந்த குளித்தலை போலீஸாா் சடலத்தை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.