கரூரில், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் 284 பேருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணையை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் புதன்கிழமை வழங்கினாா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக, கரூா் அடுத்த புலியூா் பேரூராட்சியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ. 24.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 400 சதுரஅடி பரப்பளவு கொண்ட 288 அடுக்குமாடி குடியிருப்புகளை புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து புலியூா் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புலியூா் திட்டப் பகுதியில் 283 பயனாளிகளுக்கும், சாணப்பிரட்டி திட்டப்பகுதியில் ஒரு பயனாளிக்கும் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளையும், 20 பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டிக்கொள்ள பணி ஆணையையும் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் ரூபினா, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி நிா்வாகப் பொறியாளா் பாலாஜி, கரூா் வட்டாட்சியா் சிவக்குமாா், புலியூா் பேரூராட்சித் தலைவா் புவனேஸ்வரி, இளநிலை உதவியாளா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.