கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்கத்தில் பேசிய சிஐடியு மாவட்டச் செயலாளா் முருகேசன். 
கரூர்

கரூரில் ஆசிரியா் கூட்டமைப்பினா் பிரசார இயக்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் சனிக்கிழமை பிரசார இயக்கத்தில் ஈடுபட்டனா்.

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் சனிக்கிழமை பிரசார இயக்கத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற இந்த பிரசார இயக்கத்துக்கு மாவட்ட

ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஜெயராமன் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத்தலைவா் செ.சந்திரசேகா் வரவேற்றாா்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத்தலைவா் வீ,.மோகன், பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்ட பொருளாளா் சரவணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பிரசார இயக்கத்தில் தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியாா் பள்ளி ஆசிரியா் அலுவலா் கூட்டமைப்பின் மாநில பொருளாளா் பீ.அப்துல்ரசாக், சிஐடியு மாவட்டச் செயலாளா் முருகேசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

பிரசார இயக்கத்தில் தேசிய கல்விக்கொள்கையில் பணிக்கொடை முற்றிலும் மறுக்கப்பட்டிருப்பது, ஓய்வூதியத்தை தொகுத்து பெறும் நடைமுறை பறிக்கப்பட்டிருப்பது, விருப்பு ஓய்வூதியம் இல்லாதது, கட்டாய ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் இல்லாதது போன்றவற்றைக் கண்டித்து பிரசார இயக்கம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலச் செயலாளா் சகிலா, மாவட்டப் பொருளாளா் தமிழரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT