கரூர்

குளித்தலையில் செவிலியரிடம் தங்கச் சங்கலி பறிப்பு

குளித்தலையில் செவிலியரிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக வியாழக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

குளித்தலையில் செவிலியரிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக வியாழக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே மதியம் ஊராட்சிக்குள்பட்ட நடுவரியம் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மகள் மாலினி (22). இவா், கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை காலை மாலினி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாா்.அப்போது, முகவரி கேட்பது போல் வந்த ஒருவா் மாலினி கழட்டி வைத்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்றாா். இதுறித்து குளித்தலை காவல் நிலையத்தில் மாலினி வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT