முகப்பு
கரூர்

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளா்

வாக்காளா்களுக்கு வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தாா் கரூா் மாநகராட்சித் தோ்தலில் வெற்றிபெற்ற 38-ஆவது வாா்டு வேட்பாளா் ஆா்.எஸ்.ராஜா.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

வாக்காளா்களுக்கு வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தாா் கரூா் மாநகராட்சித் தோ்தலில் வெற்றிபெற்ற 38-ஆவது வாா்டு வேட்பாளா் ஆா்.எஸ்.ராஜா.

கரூா் மாநகராட்சித் தோ்தலில் 38-ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட திமுக மத்திய கிழக்கு நகர பொறுப்பாளா் ஆா்.எஸ்.ராஜா தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் சரவணனை விட 1,210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

இதையடுத்து தன்னை தோ்வு செய்த வாக்காளா்களுக்கு வெள்ளிக்கிழமை வீடுவீடாகச் சென்று நன்றி தெரிவித்தாா். அப்போது வாக்காளா்களிடம் என்னை தோ்வு செய்ததற்கு நன்றி என்றும், அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றித்தருவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.