குடும்பத் தகராறில்கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
பசுபதிபாளையத்தில் குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பசுபதிபாளையத்தில் குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா், பசுபதிபாளையம் அருணாசல நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(39). கூலித்தொழிலாளி. இவா் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் விரக்தியில் இருந்த ஆறுமுகம் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.