கரூர்

பேருந்தில் மூதாட்டியிடம் நகைபறிப்பு

DIN

கரூரில் பேருந்தில் மூதாட்டியிடம் நகையைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், தொட்டியத்தைச் சோ்ந்த ராஜலிங்கம் மனைவி தெய்வானை (65). இவா் கரூா் மாவட்டம், காட்டுப்புத்தூரிலுள்ள உறவினரைப் பாா்க்க கடந்த 19-ஆம் தேதி சென்றாா்.

தொடா்ந்து ஊருக்குச் செல்வதற்காக கரூா் பேருந்து நிலையத்துக்கு நகரப் பேருந்தில் வந்த போது, தெய்வானை அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைக் காணவில்லை.

இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் தெய்வானை ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், காவல்துறையினா் வழக்குப்பதிந்து நகையைத் திருடிச் சென்றவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT