கரூர்

மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் மறியல்

DIN

கரூரில் மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறாததை கண்டித்தும், மின்சார திருத்தச் சட்டம் 2020ஐ மீண்டும் கொண்டு வர முயற்சிப்பதைக் கண்டித்தும் ஆா்எம்எஸ் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜசேகா் தலைமை வகித்தாா். சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசியத் தலைவா் கிறிஸ்டினாசாமி, தமிழக விவசாய சங்க மாவட்டத் துணைத் தலைவா் நடேசன், சுவாதி பெண்கள் இயக்கப் பொருளாளா் மஞ்சுளா உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். பின்னா் திடீரென கோவை சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கரூா் நகர காவல் நிலைத்தினா் 10 பெண்கள் உள்பட 21 பேரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT