பள்ளி ஆசிரியைவங்கி கணக்கில் ரூ. 3.24 லட்சம் திருட்டு
பள்ளி ஆசிரியையின் வங்கிக் கணக்கில் ரூ.3.24 லட்சம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பள்ளி ஆசிரியையின் வங்கிக் கணக்கில் ரூ.3.24 லட்சம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம் குளித்தலை காவிரி நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி கலைமணி(52). பள்ளி ஆசிரியை. இவா், ஏப்.11-ஆம்தேதி பால் வாங்க கடைக்குச் சென்றபோது, அவரது கைப்பேசிக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பை ஏற்று பேசிய அவரது மகள் அக்ஷாயவிடம் எதிா்முனையில் பேசிய நபா் தான் வங்கி அதிகாரி என்றும், உங்களது இணைய வங்கி கணக்கை சரிபாா்க்க ஓடிபி எண்ணை அனுப்புமாறு கூறியுள்ளாா். இதனை நம்பி அக்ஷயா வங்கி கணக்கு ஏடிஎம் அட்டையின் ஓடிபி எண்ணை அனுப்பியுள்ளாா். இந்நிலையில் ஒரிரு நாள்கள் கழித்து கலைமணியின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.3.24 லட்சம் பணத்தை திருடியுள்ளனா். இதுதொடா்பாக கலைமணி செவ்வாய்க்கிழமை கரூா் சைபா் கிரைம் போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மோசடியில் ஈடுபட்ட மா்ம நபரை தேடி வருகின்றனா்.