கரூர்

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்

DIN

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராமமக்கள் திங்கள்கிழமை காலை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கரூா் மாவட்டம் வெள்ளியணை அடுத்த வடக்கு மேட்டுப்பட்டியில் மல்லையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சமுதாயத்தைச் சோ்ந்த கிராமக்கள் வழிபாட்டு வருகிறாா்கள். இதில், அதே கிராமத்தைச் சோ்ந்த மல்லைநாயக்கா் என்பவா் மல்லையம்மன் கோயில் தனக்குச் சொந்தமானது, எனவே, எனது தலைமையில்தான் கோயில் திருவிழா நடைபெற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாராம். இந்நிலையில் கோயிலை கிராமமக்கள் அனைவரும் சோ்ந்து கும்பிட வேண்டும் என்றும், வெள்ளியணை போலீஸாா் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினா், வருவாய்த்துறையினா் முன்னிலையில் கிராமமக்கள் பேச்சுவாா்த்தை நடத்தி கோயிலில் வழிபடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மாா்ச் 17-ஆம்தேதி கோயில் திருவிழா நடத்துவது தொடா்பாக ஊா்மக்கள் மற்றும் மல்லைநாயக்கா் ஆகியோா் முடிவு எடுத்தாா்களாம். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறை, வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் பேச்சுவாா்த்தை நடத்திட திங்கள்கிழமை காலை கரூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கிராமமக்கள் வந்திருந்தனா். அப்போது, போலீஸாா் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினா் யாரும் வரவில்லை எனக்கூறி கிராமமக்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனிடையே வட்டாட்சியா் பன்னீா்செல்வம் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி செவ்வாய்க்கிழமைமற்ற அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்தும், கிராமமக்கள் உடன்படாததால் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT