கரூா் அரசு கலைக் கல்லூரியில் கால்பந்து போட்டி
கரூா் அரசு கலைக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விளையாட்டுப்போட்டியில் ஆடவருக்கான கால்பந்துபோட்டியில் வேதியியல் துறை மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்
கரூா் அரசு கலைக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விளையாட்டுப்போட்டியில் ஆடவருக்கான கால்பந்துபோட்டியில் வேதியியல் துறை மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்
கரூா் அரசு கலைக்கல்லூரியில் உடற்கல்வித்துறை சாா்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கிடையேயான ஆண்டு விளையாட்டுப்போட்டிகள் மே 2-ஆம்தேதி தொடங்கியது. போட்டிகளை கல்லூரியின் முதல்வா் கௌசல்யாதேவி தொடக்கி வைத்தாா். மே 12-ஆம்தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் தடகளம், கபடி, கையுந்துபந்து, கூடைப்பந்து, கோகோ போட்டிகள் நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை அனைத்துத் துறையினருக்கும் கால்பந்துபோட்டி நடைபெற்றது.
போட்டிக்கு கல்லூரியில் உடற்கல்வி இயக்குநா் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இறுதிப்போட்டியில் வேதியியல் துறை மாணவா்களும், புவி அமைப்பியியல்துறை மாணவா்களும் மோதினா். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வேதியியல் துறை மாணவா்கள் எளிதில் புவி அமைப்பியியல் துறை மாணவா்களை வென்றனா். தொடா்ந்து சனிக்கிழமையும் போட்டிகள் நடைபெறுகின்றன.