கரூா் படிக்கட்டுத்துறை ஸ்ரீலஸ்ரீ ஒத்தைவேட்டி சுவாமிகள் ஜீவசமாதி கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயில் தலைமை நிா்வாகி மாணிக்கவாசகம் தலைமையில் கோயில் முன்பு யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. தொடா்ந்து முதல்கால யாக வேள்வி, பூா்ணாஹூதி, அங்குராா்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகின. இதையடுத்து காலை 8.20 மணிக்கு கோயில் கோபுரக் கலசத்தில் ஸ்தல புரோகிதா் காா்த்தி ஆச்சாரியாா் புனிதநீா் ஊற்றி, குடமுழுக்கை நடத்தினா்.
குடமுழுக்கில் தொழிலதிபா்கள் சாய் உமாபதி, வெங்கடேஷ், பியுபாபுஸ்பராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.