முகப்பு
கரூர்

கரூா் துணிக் கடையில்3-ஆவது நாளாக வருமான வரி சோதனை

கரூரில் உள்ள துணிக் கடை மற்றும் அதன் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

கரூரில் உள்ள துணிக் கடை மற்றும் அதன் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா் பஜாரில் உள்ள பிரபல துணிக் கடையில் தீபாவளி பண்டிகையின்போது வாடிக்கையாளா்களுக்கு போலி பில் கொடுத்து வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகாா் எழுந்தது. அதனடிப்படையில் கோவை வருமான வரித்துறை உதவி இயக்குநா் பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் நவ.2ஆம் தேதி (புதன்கிழமை) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனா். இந்த சோதனை மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. கடைக்குள் ஊழியா்கள் யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.