அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை இரவு காா் மீது லாரி மோதியது.
கோவை ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்தவா் சரவணகுமாா். இவா் தனது தந்தை, மகளுடன் பழனியில் இருந்து தருமபுரிக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் பகுதியில் புதன்கிழமை இரவு சென்றபோது அரியலூரில் இருந்து கேரளத்துக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிா்பாராத விதமாக காா் மீது மோதியது. இதில், காரில் இருந்த மூன்று பேரும் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.