கரூரில் அதிமுகவினா் ஆலோசனை
பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்துவது தொடா்பாக கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்துவது தொடா்பாக கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி அமைப்புச் செயலா் ம. சின்னசாமி, மாவட்ட அவைத் தலைவா் எஸ். திருவிகா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பேரறிஞா் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை கரூா் மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா் கண்ணதாசன், இளைஞரணிச் செயலா் தானேஷ், இணைச் செயலா் மல்லிகா சுப்பராயன், கரூா் ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன், இலக்கிய அணிச் செயலா் என்எஸ். கிருஷ்ணன், பகுதிச் செயலா் சேரன் பழனிசாமி, மாவட்ட அமைப்புசார அணிச் செயலா் ரெங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.