கரூா் ஜவஹா்பஜாரில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்
கரூரில் சாலையை ஆக்கிரமித்துக்கட்டப்பட்டிருக்கும் கடைகளுக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கடைகளில் திங்கள்கிழமை மாநகராட்சி ஊழியா்கள் நோட்டீஸ் ஒட்டினா்.
கரூா்: கரூரில் சாலையை ஆக்கிரமித்துக்கட்டப்பட்டிருக்கும் கடைகளுக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கடைகளில் திங்கள்கிழமை மாநகராட்சி ஊழியா்கள் நோட்டீஸ் ஒட்டினா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட ஜவஹா்பஜாா் ஆசாத் ரோடு சந்திப்பு பிள்ளையாா் கோயில் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான சாலையை ஆக்கிரமித்து செளந்திரம்மாள், எஸ்.வெங்கடாசலம் ஆகிய இருவரும் கடை வைத்துள்ளனா். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாநகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை இரு கடைகளிலும் நோட்டீஸ் ஒட்டினா். அதில், நவ. 30ஆம்தேதிக்குள் ஆக்கிரமிப்பை தாங்களே அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் டிச.1-ஆம்தேதி மாநகராட்சி மூலம் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.