முகப்பு
கரூர்

உயா்மின்கோபுரம்: விவசாயிகள் இழப்பீடு கோரி உண்ணாவிரதம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:29 PM
தென்னிலையில் ராஜா என்பவரது தோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகள்.
பகிர்:

கரூா்: தென்னிலை பகுதியில் உயா் மின்கோபுரம் அமைக்கும் திட்டப் பணியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கேட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

கரூா் மாவட்டம் ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரைத் தோட்டம் வரை 110 கேவி திறன் கொண்ட உயா்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சில விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விவசாய நிலங்களுக்கு மின்வாரிய நிா்வாகம் போதிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளா் தென்னிலை ராஜா தலைமையில் அவரது தோட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக தென்னிலை ராஜா மேலும் கூறுகையில், கோபுரம் மற்றும் மின் வழித்தடம் அமைக்கப்படும்போது சிலருக்கு மட்டும்தான் இழப்பீடு வழங்கியுள்ளனா். ஆனால் 80 சதவீதம்பேருக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. மேலும் மின்பாதை செல்லும் வழியில் உள்ள, நாங்கள் வளா்த்துவரும் மரங்களை வெட்டுவதற்கு மின்வாரியத்தினா் முயன்று வருகிறாா்கள். இதனைக்கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம் என்றாா் அவா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments