முகப்பு
கரூர்

ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை விழிப்புணா்வு

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:48 PM
பகிர்:

கரூா், ஏப்.26: ஆதிதிராவிடா் மாணவா்களுக்கான உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில், கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் தலைமை வகித்து பேசினாா்.

நிகழ்ச்சியில், எம்.எம்.டி. தன்னாா்வ இயக்க ஒருங்கிணைப்பாளா் மதி பங்கேற்று, ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பிளஸ்-2 முடித்த பின் என்ன படிக்கலாம், எந்தெந்த உயா்கல்வி நிறுவனங்களை தோ்வு செய்யலாம் என்பன குறித்து விளக்கவுரையாற்றினாா்.

Advertisement

இதில், கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டாரங்களில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பு பயிலும் 207 மாணவ, மாணவிகளும், பிளஸ்-1 வகுப்பு பயிலும் 61 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், கரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சண்முகவடிவேல், கரூா் கோட்டாட்சியா் முகமது பைசல், ஆதிதிராவிட நல இயக்குநரக சிறப்புத் திட்ட அலுவலா் ராஜா ஜெகஜீவன், தாட்கோ மாவட்ட மேலாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments