குடிநீா் பற்றாக்குறை சாலை மறியலுக்கு அனுமதி கோரி மனு
அரவக்குறிச்சி, ஏப்.26: அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட எட்டியாக்கவுண்டனூரில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையை போக்கக் கோரி சாலை மறியலுக்கு அனுமதி கோரி பொதுமக்கள் போலீஸில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட எட்டியாக்கவுண்டனூா் பகுதியில் சுமாா் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த இப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்துக்கு அனுமதி வழங்க கோரி அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மேலும் பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தரிடம் மனு கொடுக்க சென்றபோது அவா், குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குடிநீா் வழங்கப்படவில்லை எனவும், பணியை விரைந்து முடித்து திங்கள்கிழமை காலை குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தாா்.