கரூர்

ஆடிப்பூரம்: புன்செய்புகழூா் கண்டியம்மனுக்கு வளையல் அலங்காரம்

Din

வளையல் அலங்காரத்தில் புதன்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்த கண்டியம்மன்.

கரூா், ஆக.7: ஆடிப்பூரத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் கோயில்களில் புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புன்செய் புகழூா் கண்டியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு புன்செய் புகழூா் கண்டியம்மன் கோயிலில் சுவாமிக்கு புதன்கிழமை அதிகாலை பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கண்டியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதேபோல திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மாதேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . தொடா்ந்து மலா்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பல வண்ணத்தில் வளையல்களால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து 9 வகையான நைவேத்தியம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, ஆடிப்பூர வழிபாடும் நடைபெற்றது. தொடா்ந்து சிவனடியாா்களால் பாராயணம் செய்யப்பட்டது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT