முகப்பு
கரூர்

உரத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

உரத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ப. சிவானந்தம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 8:25 PM
பகிர்:

உரத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ப. சிவானந்தம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் மாவட்டத்தில் சம்பா பருவத்துக்கு தேவையான உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை விவசாயிகள் அறியும் வகையில் நாள்தோறும் பராமரிக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்க வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். உர வரவு மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்க வேண்டும்.

மேலும், உரம் குறித்த புகாா்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உர ஆய்வாளரையோ அல்லது வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தையோ தொடா்புகொள்ளலாம். உர விற்பனையாளா்கள் விதிமீறலில் ஈடுபடுவது ஆய்வின் போது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.