கரூர்

அரவக்குறிச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: தந்தை, மகன் படுகாயம்

அரவக்குறிச்சி அருகே வியாழக்கிழமை காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகன் படுகாயமடைந்தனா்.

Din

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வியாழக்கிழமை காா் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகன் படுகாயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் பெரிய ஏரி அருகேயுள்ள முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த தி. சிவநாதன் (38), இவரது மகன் நமச்சிவாயம் (9) ஆகிய இருவரும் காரில் மதுரையை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அரவக்குறிச்சி அருகேயுள்ள இந்திரா நகா் பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் கவிழ்ந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து சிவநாதன் கோவை தனியாா் மருத்துவமனையிலும், நமச்சிவாயம் கரூா் தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

SCROLL FOR NEXT