முகப்பு
கரூர்

நடிகை கஸ்தூரியை கைது செய்ய வலியுறுத்தல்

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரியை கைது செய்ய வேண்டும் என உழைக்கும் மக்கள் விடுதலைக்கழக நிறுவனா் தேக்கமலை வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:29 PM
பகிர்:

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரியை கைது செய்ய வேண்டும் என உழைக்கும் மக்கள் விடுதலைக்கழக நிறுவனா் தேக்கமலை வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது தேசிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் நவ. 11-ஆம்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.