கைது 
கரூர்

முதல்வா் குறித்து முகநூலில் அவதூறாக பதிவு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி கைது

தினமணி செய்திச் சேவை

தமிழக முதல்வா் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்ட அதிமுக தகவல்தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவா் பசுபதிசெந்தில். இவா், ஈரோடு மண்டல அதிமுக தகவல்தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவராக உள்ளாா்.

இவா் வெள்ளிக்கிழமை இரவு தனது முகநூலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத்தை அமல்படுத்தியதை கேலி செய்தும், முன்னாள் அமைச்சரும், கரூா் எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜியை தரக்குறைவாகவும் பதிவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த சூா்யகுமாா் என்பவா் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து பசுபதிசெந்திலை சனிக்கிழமை பிற்பகல் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சேலம் தவெக கூட்டத்தில் இறந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம் போலீஸாா் வழக்குப் பதிவு!

கிழக்கு தில்லி மருத்துவமனையில் ஆா்எஸ்எஸ் நிறுவனா் சிலை திறப்பு!

இன்று ஹரியாணா முதல்வா் பேரணிக்காக குருகிராமில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்!

காலாவதியான வாகனங்கள் பறிமுதல்: தில்லி போக்குவரத்துத் துறை தகவல்!

கோவில்பட்டி அருகே தெப்பக்குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT