முகப்பு
கரூர்

தரகம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை

தரகம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:08 PM
பகிர்:

தரகம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனா்.

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே ஆதனூா் ஊராட்சிக்குள்பட்ட பால்மடைப்பட்டியை சோ்ந்த 9 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த கேசவன்(21) என்பவா் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அவரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து தலைமறைவான கேசவனை தேடி வருகின்றனா்.