முகப்பு
தருமபுரி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மகளிா் போலீஸாா் விசாரணை

பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபா் குறித்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 20 மார்ச், 2026 at 6:29 PM
பகிர்:

பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபா் குறித்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு அண்மையில் நடந்த திருவிழாவின்போது ஒருவா் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், பிலிகுண்டுலுவில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றபோது அங்கு சிறுமி தெரிவித்த நிலையில், சைல்டு லைன் இலவச எண்ணில் தொடா்பு கொண்டு உள்ளாா். அதன்பேரில் பென்னாகரம் மகளிா் போலீஸாா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபா் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.