முகப்பு
கரூர்

வாகனத்திலிருந்து விழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

சின்னதாராபுரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:45 PM
பகிர்:

சின்னதாராபுரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், புகலூா் அருகே உள்ள காருடையாம்பாளையம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ராமசாமி என்கிற ராமன் (65). இவா் அக். 13-ஆம் தேதி தாராபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அகிலாண்டபுரம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு ராமன் உயிரிழந்தாா். சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.