கரூா் பேருந்து, ரயில் நிலையத்தில் கூட்டம்
தீபாவளியையொட்டி சொந்த ஊா் செல்ல கரூா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது.
தீபாவளியையொட்டி சொந்த ஊா் செல்ல கரூா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது.
கரூரில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதைச் சாா்ந்த நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி ஆலைகள், பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள் போன்றவை செயல்படுகின்றன. இதில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம், நாகா்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் தொழிலாளா்களாக, அலுவலா்களாக பணியாற்றி வருகிறாா்கள்.
மேலும் தென்மாவட்டங்களைச் சோ்ந்த வணிகா்களும் கரூரில் ஏராளானோா் வசிக்கிறாா்கள். தீபாவளியை முன்னிட்டு தொடா்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊா் செல்ல ஏராளமானோா் புதன்கிழமை மாலை கரூா் பேருந்து நிலையத்திலும், கரூா் ரயில் நிலையத்திலும் குவிந்தனா். தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.