தரகம்பட்டியில் சனிக்கிழமை கலை நிகழ்ச்சி நடத்திய நாட்டுப்புற தெம்மாங்கு கோலாட்ட கலைக் குழுவினா் 
கரூர்

தரகம்பட்டியில் இளம் வயது திருமணம் தடுப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி!

கரூா் மாவட்டம், தரகம்பட்டியில் இளம் வயதுத் திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

கரூா் மாவட்டம், தரகம்பட்டியில் இளம் வயதுத் திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கடவூா் வட்டார மருத்துவ அலுவலா் பிரசன்னா தலைமை வகித்தாா். கடவூா் மேற்கு திமுக ஒன்றிய துணைச் செயலா் பிரபாகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியை கடவூா் மேற்கு திமுக ஒன்றியச் செயலா் செல்வராஜ் தொடக்கிவைத்தாா்.

நிகழ்வில் இளம் வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதைத் தடுத்தல், பள்ளியில் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சோ்த்து விடுதல், வளரிளம் பருவங்களில் காதல் வயப்படுதல் போன்றவற்றால் கா்ப்பம் ஏற்படுதலை தடுத்தல் போன்றவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை சின்னதுரை நாட்டுப்புற தெம்மாங்கு கோலாட்ட கலைக்குழு கலைஞா்கள் நடித்துக் காண்பித்தனா்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா்கள் மகேஸ்வரன், குணசேகரன், கடவூா் மேற்கு ஒன்றிய நிா்வாகிகள் ராஜேந்திரன், பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT