முகப்பு
கரூர்

தமிழக கிரிக்கெட் அணிக்கு தோ்வான கரூா் பள்ளி மாணவருக்கு பாராட்டு

Updated On : 4 ஜனவரி, 2025 at 1:56 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 10:28 PM

தமிழக கிரிக்கெட் அணிக்கு தோ்வு செய்யப்பட்ட கரூா் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா இன்டா்நேஷனல் பள்ளி மாணவா் எஸ். இலக்ஷித்துக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூா் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா இன்டா்நேஷனல் பள்ளியைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவா் எஸ்.இலக்ஷித். இவா் மாவட்ட, மாநில அளவில் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூலம் தமிழ்நாடு அணிக்கு, கரூா் மாவட்டத்திலிருந்து 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தோ்வு செய்யப்பட்ட மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளியின் நிா்வாகக் குழு தலைவா் சிவசுப்பிரமணியம் மற்றும் பள்ளியின் முதல்வா் முனைவா் காா்த்திகா லட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு மாணவரை பாராட்டினா்.