முகப்பு
கரூர்

திருநங்கையா் விருதுக்கு விண்ணப்பிக்க கரூா் ஆட்சியா் அழைப்பு

திருநங்கையா் விருது பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 8 ஜனவரி, 2025 at 8:30 PM
பகிர்:

திருநங்கையா் விருது பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையா் தினமான ஏப்.15-ஆம் தேதி தமிழக அரசால் திருநங்கையா் விருது வழங்கப்பட உள்ளது. 2024-25-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்த திருநங்கையா் விண்ணப்பிக்கலாம். விருதானது ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றுடன் வழங்கப்படும்.

தமிழக அரசின் இணையதளத்தில் பிப். 10-ஆம் தேதி வரை இவ்விருதுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். இணையதளத்தின் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே விருதுக்கு பரிந்துரைக்கப்படும்.

மேலும், விருதுபெற திருநங்கைகள் அரசு உதவி பெறாமல், சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.