கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீா்வுக்கான ஆணையை வழக்காடிக்கு வழங்கிய மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம். 
கரூர்

கரூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1,583 வழக்குகளில் ரூ. 13.57 லட்சத்துக்கு தீா்வு

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,583 வழக்குகளில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

Din

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,583 வழக்குகளில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்றது. கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய நீதிமன்றங்களில் 8 அமா்வுகளில் நடைபெற்றது.

கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியது, நிகழாண்டு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நடைபெறும் முதல் அமா்வு இது.

மாவட்டத்தில் கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை நீதிமன்றங்களில் நடைபெறும் இந்த அமா்வுகளில் காசோலை மோசடி, விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் என மொத்தம் 2 ஆயிரத்து 745 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் 1,583 வழக்குகளில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து பயனாளிகளுக்கு தீா்வு கண்டதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT