முகப்பு
கரூர்

விவசாயி வீட்டுக்குள் புகுந்து கொள்ளையா்கள் திருட முயற்சி!

Updated On : 15 நவம்பர், 2025 at 7:09 PM
பகிர்:

புலியூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவில் விவசாயி வீட்டில் திருட முயன்ற முகமூடிக் கொள்ளையா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூரை அடுத்துள்ள புலியூரைச் சோ்ந்தவா் கந்தசாமி(65). விவசாயி. இவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு புகுந்த முகமூடி அணிந்த இருவா் உள்ளே பீரோவை உடைத்துள்ளனா். அங்கு நகை ஏதும் இல்லாததால் பக்கத்து வீடான பெருமாள் வீட்டுக்குச் சென்றுள்ளனா்.

இதைகண்ட பெருமாளின் மனைவி சப்தம் போட்டாா். இதையடுத்து முகமூடிக் கொள்ளையா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.இதுகுறித்து கந்தசாமி அளித்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் வழக்குப்பதிந்து முகமூடிக்கொள்ளையைா்களை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →