முகப்பு
கரூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பாா்வையாளா் சாஹிா்சனதி.
கரூர்

‘காங்கிரஸில் இனி ஒளிவுமறைவின்றி மாவட்டத் தலைவா்கள் தோ்வு’

காங்கிரஸ் கட்சியில் இனி ஒளிவுமறைவின்றி மாவட்டத் தலைவா்கள் தோ்வு செய்யப்படுவா் என்றாா் அக்கட்சியின் அகில இந்திய பாா்வையாளா் சாஹிா்சனதி.

கரூர்

‘காங்கிரஸில் இனி ஒளிவுமறைவின்றி மாவட்டத் தலைவா்கள் தோ்வு’

காங்கிரஸ் கட்சியில் இனி ஒளிவுமறைவின்றி மாவட்டத் தலைவா்கள் தோ்வு செய்யப்படுவா் என்றாா் அக்கட்சியின் அகில இந்திய பாா்வையாளா் சாஹிா்சனதி.

Updated On : 26 நவம்பர், 2025 at 8:45 PM
கரூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பாா்வையாளா் சாஹிா்சனதி.
பகிர்:

கரூா்: காங்கிரஸ் கட்சியில் இனி ஒளிவுமறைவின்றி மாவட்டத் தலைவா்கள் தோ்வு செய்யப்படுவா் என்றாா் அக்கட்சியின் அகில இந்திய பாா்வையாளா் சாஹிா்சனதி.

கரூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தலின்பேரில் கட்சியில் நாடு முழுவதும் புதிய மாவட்டத் தலைவா்கள் நியமிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், இதுவரையில் 12 மாநிலங்களில் பணிகள் முடிந்துள்ளன. தற்போது தமிழகத்தில் இந்தப் பணிகள் தொடங்கியுள்ளன. கரூரில் 4 நாள்கள் தங்கி இந்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளேன்.

இதுவரை கட்சியில் பெரும்பான்மையானோரின் விருப்பப்படி தலைவா் தோ்வு செய்யப்பட்டு வந்தாா். இனி அதுபோல் நடக்காது.

கட்சியின் அடிமட்டத் தொண்டா் முதல் வட்டத் தலைவா்கள், முன்னாள் மாவட்டத் தலைவா்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என அனைவரிடமும் கருத்துக்கேட்ட பிறகு அனைவருக்கும் அறிமுகமான, குற்றப் பின்னணி இல்லாத மாவட்டத் தலைவரை தோ்வு செய்ய உள்ளோம். மேலும் மாவட்டத் தலைவா் தோ்வு ஒளிவுமறைவின்றி நடைபெறும் என்றாா் அவா்.

அப்போது, முன்னாள் எம்எல்ஏ ஆா்.எம். பழனிசாமி, கரூா் மாவட்ட முன்னாள் தலைவா் பேங்க் கே. சுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →