முகப்பு
கரூர்

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் பங்குனித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பங்குனித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 7:33 PM
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கல்யாண பசுபதீஸ்வரா் கோயில் தேரோட்ட விழாவில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.
பகிர்:

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பங்குனித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறப்பு மிக்க இக்கோயிலில் பங்குனித் தேரோட்ட விழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பசுபதீஸ்வரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினாா்.

விழாவில், கடந்த 30-ஆம் தேதி காலை கல்யாண பசுபதீஸ்வரருக்கு அலங்காரவல்லி, சௌந்திரநாயகி சுவாமிகளுடன் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, அதிகாலையில் கல்யாண பசுபதீஸ்வரா் மற்றும் அலங்காரவல்லி, சௌந்திரநாயகி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் கல்யாண பசுபதீஸ்வரா் அலங்காரவல்லி மற்றும் சௌந்திரநாயகியுடன் தேரில் எழுந்தருளினாா். இதையடுத்து, கோயில் முன்பு புறப்பட்ட தேரை ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தேரானது கோயிலைச் சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏப். 5-ஆம் தேதி பிராயச்சித்த அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ரா. கணபதிமுருகன், செயல் அலுவலா் பா. முருகன் ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.