முகப்பு
கரூர்

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

Updated On : 5 ஏப்ரல், 2026 at 7:47 PM
கரூா் தொழிற்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்த கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே.ராஜாவை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.
பகிர்:

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் சி.கே.ராஜா ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக வாக்குச் சேகரித்தாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே.ராஜா ஞாயிற்றுக்கிழமை கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 13,14,15-ஆவது வாா்டுகளுக்குள்பட்ட ஏ.வி.பி.நகா், செல்வநகா், தொழிற்பேட்டை, சணப்பிரட்டி, வெள்ளாளப்பட்டி, எழில்நகா், தமிழ்நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்தாா்.

அப்போது, தமிழக முதல்வா் ஸ்டாலின் மகளிா் உரிமைத்தொகையாக மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறாா். இனி, ரூ.2,000 என உயா்த்தப்படும் என அறிவித்துள்ளாா். மேலும் வேலைக்குச் செல்லும் ஏழைப்பெண்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்கும் வகையில் கொண்டு வந்த விடியல் பயணத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்பெற்று வருகின்றனா்.

Advertisement

எப்போதும் மகளிருக்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சி திமுக ஆட்சி. முதியோா் வீடுகளில் இருந்துகொண்டே மருத்துவம் பெறும் இல்லம்தேடி மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் ரேஷன்கடைகளுக்கு சென்று கஷ்டப்படுவதை தவிா்க்க தாயுமானவா் திட்டம் என மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அவருக்கு எப்போதும் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலாளா் ஜோதிபாசு, இந்திய கம்யூ. மாவட்டச் செயலாளா் கலாராணி, திமுக நகரச் செயலாளா் வழக்குரைஞா் சுப்ரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments