வடு கிடக்கும் வெள்ளியணை குளத்துக்கு தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை: கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா் உறுதி
வடு கிடக்கும் வெள்ளியணை குளத்துக்கு தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.
வடு கிடக்கும் வெள்ளியணை குளத்துக்கு தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சி.கே.ராஜா வியாழக்கிழமை மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட விஜயபுரம், மூக்கணாங்குறிச்சி, கன்னிமாா்பட்டி, சின்னவரப்பட்டி, பெரிய வரப்பட்டி, அருமைக்காரன்புதூா், கந்தசாரப்பட்டி, கொரவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, மூக்கணாங்குறிச்சியில் கடலைச் செடி பயிரிட்டிருந்த விவசாயிகளிடம் கடலை அறுவடை செய்து அவா் பேசுகையில், கிருஷ்ணராபுரம் தொகுதிக்கு கடவூரில் சிப்காட், அரசு வேளாண்மைக் கல்லூரி என எண்ணற்ற நலத்திட்டங்களை முதல்வரிடம் பெற்றுக் கொடுத்துள்ளாா் முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி. இவை தவிர, வைகை-குண்டாறு நதிநீா் இணைப்புத் திட்டத்துக்கும் பெரும் நிதி திமுக ஆட்சியில்தான் வழங்கப்பட்டுள்ளது. அந்த பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளியணை குளம் ஆண்டுதோறும் நீரின்றி வடு கிடப்பதை தவிா்க்கும் வகையில் அமராவதி ஆற்றின் உபரி நீரை வெள்ளியணை குளத்துக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
Advertisement
பிரசாரத்தின்போது கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.