முகப்பு
கரூர்

அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கரூா் ராஜபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 1:15 AM
பகிர்:

கரூா் ராஜபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த அரங்கப்பாளையத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (54). கூலித் தொழிலாளி. இவா் வியாழக்கிழம் இரவு மதுபோதையில், ராஜபுரம் பட்டாளம்மன் கோயில் பகுதியில் அமராவதி ஆற்றில் குளித்தாராம். ஆழமான பகுதியில் குளித்தபோது நீரில் மூழ்கிய அவா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற அரவக்குறிச்சி போலீஸாா், தொழிலாளியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.